Tuesday 3rd of March 2026 - 05:42:53 PM
"கோவிஷீல்டு" தடுப்பூசி பக்கவிளைவுகளை தரலாம்; தயாரிப்பு நிறுவனம் அஷ்ட்ராஜெனேகா.
எல்லாளன் / 30 ஏப்ரல் 2024

கொரனா பேரழிவு காலத்தில் அனைத்து நாட்டு அரசாங்கமும், கூவி கூவி மக்களை கொரனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள அழைத்தது. அப்படி மக்கள் போட்டுக் கொண்ட தடுப்பூசிகளில் ஒன்றுதான் கோவிஷீல்டு. இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு, சில நேரங்களில் ஏதேனும் பக்கவிளைவுகளை வரலாம் என இந்த ஊசியை தயாரித்த நிறுவனம் அஷ்ற்றாஜெனேகா தற்பொழுது லண்டன் கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளது.

இரண்டரை வருடங்கள், ஒட்டு மொத்த உலகையே உலுக்கி, மக்களை அவரவர் வீட்டிற்குள் முடக்கிப்போட்ட கொரனா தொற்றால் லட்சக்கணக்கானோர் மாண்டனர். ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே சீர்குலைந்தது. கொரனாவை தடுக்க தடுப்பு மருந்து வராதா என்ற ஏக்கத்தில் மக்களும், அரசாங்கமும் தடுமாறிக் கொண்டிருந்தபோது, ஆபத்பந்தனாக வந்த தடுப்பூசிகள்தான் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு. இந்த தடுப்பு மருந்து பல நாடுகளின் அரசாங்கங்களால் பொது மக்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது. உலகின் பெரும்பாலான மக்கள் இந்த ஊசிகளை போட்டு கொண்டனர். இந்த தடுப்பூசிகளால், மக்களின் உயிருக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் அல்ல்லது அச்சுறுத்தல்கள் ஏற்படுமா என்ற கேள்வி அப்பொழுதே சில மருத்துவ வல்லுநர்களாலும், மக்களாலும் எழுப்பப்பட்டது. ஆனால், இந்த தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் அச்சப்பட தேவையில்லை, இந்த தடுப்பூசிகள் பக்கவிளைவுகள் அற்ற மிக பாதுகாப்பான மருந்துகள் என வாக்குறுதி கொடுத்தன.

ஆனால், சமீப காலமாக, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட பலரின் உடல்நலம் பாதிக்கப்படுவதாக லண்டன் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில்,ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்துடன் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்த "அஷ்ட்ராஜெனேகா" நிறுவனம், "கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு, சில நேரங்களில், அரிதாக சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ரத்தம் உறைதல் மற்றும் டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome) போன்ற பாதிப்புகள் அரிதாக ஏற்பட கூடும்" என ஒப்புதல் வாக்குமுலம் கொடுத்துள்ளது. மேலும் இந்த பக்க விளைவுகள் வெகு சிலருக்கு, அதுவும் மிக அரிதாகவே ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது "அஷ்ட்ராஜெனேகா" நிறுவனம்.

டிரண்டிங்
தனது காதல் திருமணத்தைப் பற்றி முதல் முறையாக பேட்டி அளித்த கீர்த்தி சுரேஷ்.
சினிமா / 06 ஜனவரி 2025
தனது காதல் திருமணத்தைப் பற்றி முதல் முறையாக பேட்டி அளித்த கீர்த்தி சுரேஷ்.

தமிழ் திரைப்படங்களில் டாப் ஹீரோயினாக வளம் வந்த கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது நீண்ட

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி