அஜித், ரஜினிகாந்த் வரிசையில் சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் படம் பேன்- இந்தியா அளவில் 350 கோடி வசூலைப் பெற்று வெற்றி அடைந்ததை அடைத்து, பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏ.ஆர் முருகதாஸ் உடன் தன்னுடைய 23 ஆவது படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவிகிதம் முடிந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கும் படத்தில் அடுத்ததாக நடித்த வருகிறார்.
கோலிவுட்டில் டாப் ஹீரோவாக தற்போது வளம் வரும் சிவகார்த்திகேயன், தன்னுடைய சினிமா வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளை பற்றி ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அமரன் பட வெற்றியில் ஆரம்பித்து, தான் வளர்ந்து வரும் காலங்களில் கோலிவுட்டில் தன்னை தாக்குவதற்கு என்றே ஒரு கும்பல் இருந்ததாக பட்டும் படாமல் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.
"கோலிவுடில் இருக்கும் சிலர் உண்மையாகவே என் நடிப்பை பாராட்டியுள்ளனர். ஒரு சிலர் நேரடியாக என்னை பார்த்து அப்படி என்ன செய்து விட்டேன் என கேட்டார்கள். யார் நீ? எதுக்கு இண்டஸ்ட்ரில இருக்க? இப்படி நிறைய கேட்டு இருக்காங்க. என்னுடைய படம் தோல்வியடைந்தால் என்னை கடுமையாக தாக்க சில குரூப் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வெற்றி பதிலடி கிடையாது. நான் என்னை நம்பி படத்தை தயாரிப்பவர்களுக்கும், என்னை நேசிப்பவர்களுக்கும், சினிமாவில் என்னை போல் உயர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டுமே உழைக்கிறேன்" என்று தன்மையாக பதில் அளித்து இருந்தார்.
மேலும் கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளராக, அப்படம் ஃபிலாப் ஆனதற்கு நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என்று தொகுப்பாளினி கேட்டதற்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில், "கொட்டுக்காளி படம் ஒரு சோதனைக்குரிய படம் தான். ஆனால் வெற்றியாக இருந்தாலும் சரி, வீழ்ச்சியாக இருந்தாலும் முழுவதையும் நான் ஏற்றுக் கொள்வேன். ஒருபோதும் இது போன்ற படம் எடுத்ததற்காக வருத்தப்பட மாட்டேன். சொல்லப்போனால் வரும் காலகட்டங்களில் இது போன்ற படங்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் ஹிந்தி நடிகர் ஆமிர் கான், நடிகர் சிவகார்த்திகேயனிடம் 'உன்னுடைய முதல் ஹிந்தி திரைப்படம் என்னுடன் சேர்ந்து நடித்ததாக இருக்கும்' என்று கூறி, நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக என்னிடம் சொல் என்று கூறி இருந்ததாக சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, தனது மாமனார் ஆரம்ப காலகட்டங்களிலேயே சினிமாவில் கால் பதிக்க நினைத்தபோது பெரும் ஆதரவளித்ததாக கூறினார்.
சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிக்கும் போது சண்டைக் காட்சிகளில் ஒருபோதும் தனக்கு எதிராக சண்டை போடுபவர்களை தாக்கி விடக்கூடாது என்று நினைப்பாராம். சில சண்டைக் காட்சிகளில் உண்மையாகவே எதிர் உள்ளவர்களை தாக்க இருந்தால் முதலில் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுவாராம். "சண்டைக் காட்சி என்பது மற்றவரை தொடாமல் தாக்குவது போன்று நடிப்பது தான்." என்று கூறுகிறார்.
அதற்கு தொகுப்பாளினி, இது போன்று அடக்கமாக இருப்பது தான் உங்களுக்கு பெறுதளவில் வெற்றியை கொடுத்ததா என்று கேட்டதற்கு, "அடக்கம் என்பதும் மனிதநேயம் என்பதும் வேறு வேறு. அதேபோன்று, அடக்கமாக இருப்பதினால் வெற்றி கிடைக்கிறது என்பதும் தவறு." என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்த நேர்காணலின் சில பகுதிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதிலிருந்து, அவர் எவ்வளவு உயரங்களுக்குச் சென்றாலும் ஆரம்ப காலகட்டங்களில் இருந்தது போன்றே பேச்சும், நடவடிக்கையும் கடுகளவும் மாறாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.